கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை 235 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல கிராமங்களில் சில பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும், கண்டாவளையில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேரும், பூநகரியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 408 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு பொது மக்களின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் அவர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதேச செயலக ஊழியர்கள், இராணுவம் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|
|