வட மாகாணத்தில் நிலவும் வறட்சியால், 91 ஆயிரத்து 639 குடும்பங்களைச் சேர்ந்த, சுமார் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளை பகுதிகளிலேயே அதிக வறட்சி நிலவி வருகின்றது.
இதனால் பச்சிலைப்பள்ளி, பளை பகுதியில் குளத்து நீர் வற்றியதால், கால்நடைகளும் பறவைகளும் நீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன.
அதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.