ஹட்டன் – மஸ்கெலியா மொக்காத்தோட்டத்தில் அதிசய கன்று குட்டியொன்று பிறந்துள்து.
எட்டுக்கால்களும், இரண்டு தலைகளையும் கொண்ட கன்று குட்டியொன்றே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மொக்கா மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த சன்முகசுந்தரம் என்பரிவனால் வளர்க்கப்பட்ட பசுவே இன்று மாலை குறித்த கன்றுக் குட்டியினை ஈன்றுள்ளது.
எட்டுக்கால்கள் இரண்டு தலைகள் மற்றும் இரண்டு வால்களுடன் பிறந்த இக்கன்று குட்டி ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்து விட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.
எனினும் இதனை பார்வையிடுவதற்கு மக்கள் அதிக அளவில் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது