இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 7 விசேட ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்தானது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சீன பிரதமர் லீ க்சியங்கிற்கும் இடையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின
இதன்போது கருத்து தெரிவித்த சீன பிரதமர், 500 மில்லியன் யுவான்களை இலங்கைக்கு வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் கைத்தொழில், முதலீடு வலயங்கள் மற்றும் கைத்தொழில் திட்டங்களுக்கு சீன அரசாங்கம், இலங்கைக்கு முழுமையான உதவிகளை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சீன பிரதமரை இலங்கை விஜயம் மேற்கொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.இதனை ஏற்றுக்கொண்ட, சீன பிரதமர் அடுத்த ஆண்டு இலங்கை வருவதாக தெரிவித்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள பிரதமர், நாளைய தினம் சீன ஜனாதிபதியை உத்தியோக பூர்வமாக சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.