நடிகை நயன்தாராவை அவரது சென்னை வீட்டுக்குள் புகுந்து சிலர் கடுமையாகத் தாக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி வந்த நயன்தாரா, சென்னை கோயம்பேடு அருகே ஒரு வீடு வாங்கி குடியேறிவிட்டார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நயன் தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என்று கூறி மர்ம நபர்கள் சிலர் நயன்தாராவின் வீட்டிற்குல் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளதாகவும் செய்தி பரவியுள்ளது.
அவர் தற்போது வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.