யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் விலங்குகள் பலியிட்டு வேள்வி நடத்த யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு விதித்து தீர்ப்பளித்துள்ளது.
யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை நேற்று விடுத்துள்ளார்.
ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.