வவுனியாவில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை கடந்த செவ்வாய்கிழமை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தம்மால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய மோட்டார் சைக்கிளில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வவுனியா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.