50 வயதுடைய வகுப்பாசிரியர் 10 வயது மாணவியை கணனி அறைக்கு அழைத்து பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து கம்பளை நீதிமன்ற நீதிவான் சாந்தனி மீகொட வகுப்பாசிரியரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் கம்பளை பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
தனது வகுப்பில் கல்வி பயிலும் 10 வயது சிறுமி ஒருவரை வகுப்பாசிரியர் அழைத்து உனது சகோதரர் குற்றம் புரிந்துள்ளார். உன்னிடம் விளக்கமா கூறுகின்றேன் கணணி அறைக்கு போ என தெரிவித்துள்ளார்.
சிறுமி அங்கு சென்றதும் ஆங்கில பாடத்துக்கு பொறுப்பான வகுப்பாசிரியர் சிறுமி மீது பாலியல் குற்றம்புரிந்துள்ளார்.
சிறுமி இச் செயலை பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிசார் சந்தேகத்தின் பேரில் ஆசிடியரை கைது செய்து நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தபோது நீதவான் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.