நல்லாட்சி அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள உர மானியத்திற்குப் பதிலீடாக காசோலை வழங்கும் வேலைத் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்பான தரவு சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியாகவுள்ள கமநல மத்திய நிலையங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. விவசாயிகள் தமது நெற்செய்கை தொடர்பான சகல விபரங்களையும் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் பிரதேசத்திலுள்ள கமநல மத்திய நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவசாய அமைச்சு, சகல கலநல உத்தியோகத்தர்களுக்கும் கடிதம் மூலமாக அறிவித்துள்ளது
விவசாயம் தொடர்பில் சரியான தகவல்களை வழங்காத விவசாயிகளுக்கு மானிய அடிப்படையிலான உரமானியத்திற்கான காசோலை வழங்கப்படுவதில் சிரமம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, விவசாயிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.