பல குற்ற செயல்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணை மூலம் விடுவிக்கப்பட்ட நபரொருவர் காலி கோனலகொட பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 26 வயதான கோனலகொட பிரதேசத்ததை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாகொட காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோதலில் காயமடைந்த மேலும் இருவர் நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாணந்துறையில் வைத்து சிற்றூர்தியில் போதை பொருளை கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது பிரதேசத்தைவிட்டு தப்பி சென்றுள்ளதாவும் நாகொட காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.