கண்டி அம்பிடிய சிவப்பு மதகிட்கு அருகாமையில் குழந்தை ஒன்றின் சடலத்தை காவற்துறையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.
பிரதேச மக்கள் சடலத்தை அவதானித்த பின்னர் காவற்துறைக்கு தகவல் வழங்கியமைக்கு அமைவாக காவற்துறையினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் பெற்றோர்கள் அல்லது குழந்தையை விட்டு சென்ற நபர்கள் பற்றிய தகவல்கள் இதுவரையில் அறியப்படவில்லை.